மெல்பர்னில் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

மெல்பர்னில் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

1 mins read
b77998b0-da4a-44e6-acb9-5f586927a65a
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரில் நாளை கொவிட்-19 முடக்­க­நி­லையை எதிர்த்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்­ப­தால், பொதுப் போக்­கு­வ­ரத்தை நிறுத்­த­வும் ஆயி­ரக்­க­ணக்­கான போலிஸ்­கா­ரர்­க­ளைப் பணி­யில் ஈடு­ப­டுத்­த­வும் விக்­டோ­ரியா மாநில அதி­கா­ரி­கள் திட்­ட­மிட்டு வரு­கின்­ற­னர்.

சனிக்­கி­ழ­மை­யன்று காலை எட்டு மணி முதல் பிற்­ப­கல் 2 மணி வரை பொதுப் போக்­கு­வ­ரத்து முடக்­கப்­பட்­டி­ருக்­கும் என்­றும் சாலை­களில் தடுப்­பு­கள் வைக்­கப்­பட்­டி­ருக்­கும் என்­றும் விக்­டோ­ரியா மாநில போலிஸ் துறை தெரி­வித்­துள்­ளது. இவற்றை மீறு­வோ­ருக்கு 5,500 ஆஸ்­தி­ரே­லிய டாலர் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லேயே ஆக அதி­க­மாக மெல்­பர்ன் நகர மக்­கள் ஆறா­வது முறை­யாக முடக்­க­நி­லையை எதிர்­கொண்­டுள்­ள­னர். கிரு­மித்­தொற்­றின் மூன்­றா­வது அலை­யைக் கட்­டுக்­குள் கொண்டு வர போரா­டும் மெல்­பர்­னில், தடுப்­பூசி போடும் பணி தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.