சிறப்பு இருவழிப் பயணம்; தற்காலிக நிறுத்தம் நீட்டிப்பு

சிறப்பு இருவழிப் பயணம்; தற்காலிக நிறுத்தம் நீட்டிப்பு

2 mins read
89399741-8c47-4e95-9b0a-133030ada423
-

வெலிங்­டன்: ஆஸ்­தி­ரே­லியா

வுட­னான சிறப்பு இரு­வ­ழிப் பயண ஏற்­பாட்டை நியூ­சி­லாந்து மேலும் எட்டு வாரங்­க­ளுக்கு நிறுத்­தி­வைத்­துள்­ளது.

இரு­நா­டு­க­ளி­லும் புதி­தாக டெல்டா கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் புதி­தாக பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தால் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிறப்பு இரு­வ­ழிப் பய­ணத்­தின்­படி பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டார்­கள். ஆனால் கிரு­மித்­தொற்று நிலை மோச­ம­டைந்­தி­ருப்­ப­தால் இந்த ஏற்­பாடு இப்­போ­தைக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது என்று இரு­நாட்டு அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தப் பயண ஏற்­பாடு அறி

முகப்­ப­டுத்­தப்­பட்ட சில வாரங்­க­ளி­லேயே, கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி­யன்று தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டது. ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி, மெல்­பர்ன்

நக­ரங்­களில் டெல்டா கொவிட்-19 கிருமி வகை பர­வல் ஏற்­பட்­ட­தால் பயண ஏற்­பாடு நிறுத்­தி­வைக்­கப்­பட்­டது. இந்­தத் தற்­கா­லிக நிறுத்­தம் இம்­மா­தம் 24ஆம் தேதி­யு­டன் முடி­வு­டை­யும் என்று முத­லில் தெரி­விக்­கப்­பட்­டது.

டெல்டா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்ட பயணி ஒரு­வர் ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து நியூ­சி­லாந்­தின்

ஆக்­லாந்து நக­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்­டதை அடுத்து, கொவிட்-19 பாதிப்பு இல்­லா­மல் இருந்த நியூ­சி­லாந்­தில் கிரு­மித்­தொற்று மீண்­டும் தலை­தூக்­கி­யது.

தற்­போது ஆக்­லாந்­தில் முடக்­க­நிலை நடப்­பில் உள்­ளது. நியூ­சி­லாந்­தின் மற்ற பகு­தி­களில் முடக்­க­நிலை முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

"ஆக அண்­மைய கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர நாங்­கள் மேற்­கொண்டு வரும் முயற்­சி­கள் பலன் அளித்­துள்­ளன.

"அடுத்த வாரத்­துக்­குள் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த இலக்கு கொண்­டுள்­ளோம்.

"இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான சிறப்பு இரு­வ­ழிப் பய­ணத்தை மீண்­டும் தொடர்ந்­தால் எங்­களுடைய இத்­தனை நாள் கடும் உழைப்­புக்கு அர்த்­தம் இல்­லா­மல் போய்­வி­டும்," என்று கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்­ளும் பிரி­வுக்­குத் தலைமை தாங்­கும் அமைச்­சர் கிறிஸ் ஹிப்­கின்ஸ் தெரி­வித்­தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான சிறப்பு இரு­வ­ழிப் பய­ணத்தை மீண்­டும் தொடர்­வது குறித்து நியூ­சி­லாந்து அர­சாங்­கம் அடுத்த மாதம் மறு­ஆய்வு செய்­யும் என்று அவர் கூறி­னார்.

நேற்­றைய நில­வ­ரப்­படி நியூ­சி­லாந்­தில் புதி­தாக 11 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. புதிய கொவிட்-19 அலை­யால் அந்­நாட்­டில் இது­வரை 1,007 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, டெல்டா கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முறி

யடிக்­கும் இலக்கை தமது நாடு நெருங்­கு­வ­தாக நியூ­சி­லாந்­துப்

பிர­த­மர் ஜெசின்டா ஆர்­டன் தெரி­வித்­தார்.

தடுப்­பூசி போடும் திட்­டத்தை மேலும் விரை­வு­ப­டுத்த ஸ்பெ­யின், டென்­மார்க் ஆகிய நாடு­களி

லிருந்து நியூ­சி­லாந்து கூடு­தல் தடுப்­பூ­சி­களை வாங்­கு­கிறது.