மலேசியாவில் கிட்டத்தட்ட 80% பெரியவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட்டனர்

மலேசியாவில் கிட்டத்தட்ட 80% பெரியவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட்டனர்

1 mins read
3b7aab58-e032-4ad9-9e75-cc135db8620e
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் 76.8 (17,973,545) விழுக்­காடு பெரி­ய­வர்­கள் முழுமையாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டு­விட்­ட­தாக அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

92.7 விழுக்­காடு பெரி­ய­வர்­கள் குறைந்­தது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டு­விட்­ட­தாக சுகா­தா­ரத் துறை டுவிட்­ட­ரில் பதி­விட்­டது.

நேற்று 202,298 பேருக்­குத் தடுப்­பூசி போடப்பட்டதாக மலே­சிய சுகா­

தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அவர்­களில் 61,108 பேர் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­னர்.

140,190 பேர் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­னர்.

கடந்த பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதி­யன்று மலே­சி­யா­வின் தேசிய கொவிட்-19 தடுப்­பூசி போடும் திட்­டம் தொடங்­கி­ய­தி­லி­­ருந்து அந்­நாட்­டில் இது­வரை 39,685,414 பேர் குறைந்­தது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டு­ள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தில் 30,484 பேரும் சாபாவில் 16,351 பேரும் தலைநகர் கோலாலம்பூரில் 15,863 பேரும் சிலாங்கூரில் 14,016 பேரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டு விட்டனர்.