ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சூச்சி

ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சூச்சி

1 mins read
0266f8bc-669b-4c82-ad51-fd2a223e8def
-

யங்­கூன்: அதி­கா­ரம் இழந்த முன்­னாள் மியன்­மார் தலை­வர் திரு­வாட்டி ஆங் சான் சூச்­சிக்கு எதி­ராக அந்­நாட்­டைத் தற்­போது ஆட்சி செய்து வரும் ராணு­வம் ஊழல் குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்­ளது.

திரு­வாட்டி சூச்­சிக்கு எதி­ராக மியன்­மார் ராணு­வம் அடுக்­க­டுக்­காகப் பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ள­தா­க­வும் குற்­றம் நிரூபிக்­கப்­பட்­டால் அவர் பல ஆண்டு­க­ளுக்கு சிறை­யில் அடைக்­கப்­ப­ட­லாம் என்­றும் திருவாட்டி சூச்­சி­யின் வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார். மியன்­மார் மக்­க­ளால் ஜன­நா­யக முறைப்­படி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கம் கவிழ்க்­கப்­பட்­ட­தி­லி­ருந்து 76வயது திரு­வாட்டி சூச்சி வீட்­டுக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். திரு­வாட்டி சூச்­சிக்கு எதி­ரான புதிய வழக்கு விசா­ரணை அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று தலைநகர் நேப்பிடாவில் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.