ஜகார்த்தா: தென்கிழக்காசியாவில், குறிப்பாக தென்சீனக்
கடலில் அதிகாரம், ஆயுதப் போட்டி நிலவும் அபாயம் இருப்பதாக இந்தோனீசியா கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பாதுகாப்புக் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக அணுவாயுதம் பொருந்திய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
தென்சீனக் கடலில் சீனா அதன் அதிகாரத்தைக் காட்டி வரும் வேளையில் அதை எதிர்கொள்ள இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டது. இதற்குச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலை நீடித்தால் தென்
கிழக்காசியாவுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு நேற்று அறிக்கை வெளியிட்டது.