பாரிஸ்: பிரான்ஸ், தனக்குக் கிடைக்க வேண்டிய நீர்மூழ்கிக் கப்பல் குத்தகை கைவிட்டுப் போன பின்னர் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான அதன் தூதர்களை ஆலோசனைக்காக அந்நாடுகளிலிருந்து மீட்டுக்கொண்டுள்ளது. அது குறித்த உத்தரவை பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன் நேற்று முன்தினம் பிறப்பித்தார்.
பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பாரிசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த கான்பெரா அதனிடம் தெரிவிக்காமல், அமெரிக்காவிடமிருந்து கப்பலைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. அதனைத் தொடர்ந்து தூதர்கள் உடனடியாக மீட்டுக்கொள்ளப்பட்டதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ழான்-யுவேஸ் லே டிரியன் கூறினார்.
அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கடந்த 15ஆம் தேதி செய்த அறிவிப்பின் 'தீவிரத்தன்மையால்' இத்தகைய 'தீவிர' நடவடிக்கை தேவைப்பட்டதாக பிரெஞ்சு அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் நடந்த இருநாட்டுப் பேச்சுவார்த்தையை ஆஸ்திரேலியா இப்படி கைவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.
பாரிஸ் அதன் தூதர்களை ஒரு நாட்டிலிருந்து இவ்வாறு மீட்டுக்கொண்டது இதுவே முதல் முறை என்று அரசதந்திரிகள் கூறினர்.
பிரான்சின் அந்த முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக ஆஸ்திரேலியா நேற்று குறிப்பிட்டது. ஆனால் பிரான்சுடான உறவை மதிப்பதாகவும் மற்ற பல விவகாரங்களில் அதனுடன் தொடர்ந்து உரையாடப் போவதாகவும் அது கூறியது.
ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா அணுவாற்றல் தொழில்நுட்பமுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களையும் நுண் ணறிவு ஆற்றல்களையும் ஆஸ்திரே லியாவுக்கு வழங்கும். சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பதே அதன் நோக்கம் என்று கருதப்படுகிறது.
ஆனால் 50 பில்லியன் ஆஸ்தி ரேலிய டாலர் ஒப்பந்தம் பிரான்சின் கைவிட்டுப் போய்விட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு மலேசியா
அறிவுறுத்தல்
இவ்வேளையில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஒப்பந்தமும், அந்நாடுகள் பிரிட்டனும் சேர்ந்து அறிவித்துள்ள மூன்று நாட்டு 'ஆக்கஸ்' பங்காளித்துவமும் இந்தோ பசிஃபிக் வட்டாரத்தில் ஆயுதப் போட்டாப் போட்டியை ஏற்படுத்தக் கூடும் என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் நேற்றுமுன்தினம் நடந்த தொலைபேசி உரையாடலின்போது மலேசியப் பிரதமர் அவ்வாறு கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறின.

