ஆப்கான்: உயர்நிலைப் பள்ளிகளில் பெண்களுக்கு இடமில்லை

ஆப்கான்: உயர்நிலைப் பள்ளிகளில் பெண்களுக்கு இடமில்லை

1 mins read
ab295a33-59a7-4ccf-9a82-2c1bcfca7549
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னின் தலி­பான் ஆட்­சி­யா­ளர்­கள் அந்­நாட்டு ஆண் ஆசி­ரி­யர்­க­ளை­யும் ஆண் மாண­வர்­க­ளை­யும் உயர்­நி­லைப் பள்ளி­க­ளுக்­குத் திரும்­பும்­படி உத்த­ர­விட்டு உள்­ள­னர்.

இதன்­வழி 13 முதல் 18 வயது வரை­யி­லான பெண்­க­ளுக்கு உயர்­நி­லைக் கல்­வி­யில் இட­மில்லை என்று அவர்­கள் கோடி­காட்டி உள்­ள­னர். அங்கு நேற்று பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டன.

தங்­கள் எதிர்­கா­லம் இருண்­டு­விட்­டது என்று உயர்நிலைப் பள்ளி செல்­லும் பெண்­கள் சிலர் கூறி­னர்.

1990களில் நடந்த தலி­பான் ஆட்­சி­யில் பெண்­கள் பள்­ளிக்கோ வேலைக்கோ போக அனு­ம­திக்­கப் பட­வில்லை. ஆப்­கா­னிஸ்­தா­னைக் கடந்த மாதம் மீண்­டும் கைப்­பற்­றிய தலி­பான்­கள், இந்த முறை அவர்­ க­ளின் ஆட்­சி­யில் சில தளர்­வு­கள் இருக்­கும் என்று உறு­தி­கூ­றி­யி­ருந்­த­னர். இதனால் ஆப்­கா­னிஸ்தானில் பெண்­ கல்வி பற்றி ஆழ்ந்த கவலை கொள்­வ­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் ஆப்­கா­னிஸ்­தா­னின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள ஜலா­லா­பாத் நக­ரத்­தில் நடந்த வெடி­குண்டு தாக்­கு­தல்­களில் குறைந்­தது இரண்டு பேர் கொல்­லப்­பட்­ட­னர். மேலும் 19 பேருக்­குக் காயம் ஏற்­பட்­டது. நங்­கர்­ஹார் மாநி­லத்­தின் மருத்­து­வத் துறை அதி­காரி ஒரு­வர் ஏஎப்பி நிறு­வ­னத்­தி­டம் இதைத் தெரி­வித்­தார்.

தலி­பான்­க­ளின் வாக­னங்­கள் தாக்­கு­தல்­களில் குறி­வைக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.