தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழங்கள் இறக்குமதிக்கு சீனா தடை; மிரட்டும் தைவான்

1 mins read
23d934ae-2b5e-4b3e-aca9-f97128be5848
-

தைப்பே: தைவா­னில் இருந்து குறிப்­பிட்ட பழங்­களை இறக்­கு­மதி செய்­வதை சீனா நிறுத்­தி­யுள்­ளதை அடுத்து, இந்த விஷ­யத்தை உலக வர்த்­தக மையத்­திற்­குக் கொண்டு செல்­லப்போவ­தாக தைவான் மிரட்டியுள்­ளது.

தைவான் தனது நாட்­டின் ஒரு பகுதி என்று நீண்ட காலமாகக் கூறி வரும் சீனா, தனது இறை­யாண்­மையை தைவான் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற நோக்­கில் அர­சி­யல், ராணுவ ரீதி­யில் நெருக்­கடி கொடுத்து வரு­கிறது.

அந்த வகை­யில் இரு நாடு­

க­ளுக்­கும் இடையில் உருவாகி இருக்­கும் புதிய பிரச்­சினை இது.

தைவா­னில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சீதா பழம், 'வேக்ஸ்' ஆப்­பிள்­களில் பூச்­சிக்­கொல்லி மருந்­து­கள் இருப்­ப­தாகக் கூறிய சீன சுங்­கத் துறை அதற்கு அனு­மதி அளிக்க மறுத்தது.

அறி­வி­யல்­பூர்­வ­மாக எந்­த­வி­த­மான ஆதா­ர­மும் அளிக்­கா­மல் ஒரு­த­லை­ப்பட்­ச­மாக சீனா முடி­வெ­டுத்­துள்­ள­தாக தைவான் விவ­சா­யத் துறை அமைச்­சர் சொன்­னார்.

இரு­த­ரப்பு ஒப்­பந்­தத்­தின்படி, வரும் 30ஆம் தேதிக்­குள் பெய்­ஜிங் இதற்கு தீர்வு காண­வில்லை என்­றால் இது குறித்து உலக வர்த்­தக மையத்­தில் முறை­யி­டப்­படும் என தைவான் எச்­ச­ரித்­துள்­ளது.