தைப்பே: தைவானில் இருந்து குறிப்பிட்ட பழங்களை இறக்குமதி செய்வதை சீனா நிறுத்தியுள்ளதை அடுத்து, இந்த விஷயத்தை உலக வர்த்தக மையத்திற்குக் கொண்டு செல்லப்போவதாக தைவான் மிரட்டியுள்ளது.
தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று நீண்ட காலமாகக் கூறி வரும் சீனா, தனது இறையாண்மையை தைவான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரசியல், ராணுவ ரீதியில் நெருக்கடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில் இரு நாடு
களுக்கும் இடையில் உருவாகி இருக்கும் புதிய பிரச்சினை இது.
தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீதா பழம், 'வேக்ஸ்' ஆப்பிள்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாகக் கூறிய சீன சுங்கத் துறை அதற்கு அனுமதி அளிக்க மறுத்தது.
அறிவியல்பூர்வமாக எந்தவிதமான ஆதாரமும் அளிக்காமல் ஒருதலைப்பட்சமாக சீனா முடிவெடுத்துள்ளதாக தைவான் விவசாயத் துறை அமைச்சர் சொன்னார்.
இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, வரும் 30ஆம் தேதிக்குள் பெய்ஜிங் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் இது குறித்து உலக வர்த்தக மையத்தில் முறையிடப்படும் என தைவான் எச்சரித்துள்ளது.