சோல்: அமெரிக்கா அறிவித்த இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் புதிய பங்காளித்துவமும் ஆஸ்திரேலியாவுக்கு அணு ஆற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் விற்கும் ஒப்பந்தமும் இந்த வட்டாரத்தில் அணுவாயுதப் போட்டியை ஏற்படுத்தலாம் என்று வடகொரியா நேற்று எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியா, பிரிட்டனுடன் முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது. இதன்கீழ், அமெரிக்காவிடமிருந்து அணுவாயுத ஆற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்கும்.
"இது, மிகவும் விரும்பத்தகாத, ஆபத்தான முடிவு. ஆசிய-பசிஃபிக் வட்டாரத்தின் உத்திபூர்வ சமநிலையையும் இந்த நடவடிக்கை பாதிக்கும் அணுவாயுதப் போட்டாபோட்டியை ஏற்படுத்தும்," என வடகொரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டதாக உள்ளூர் செய்தி தெரிவித்தது.
அனைத்துலக அளவிலான அணுவாயுதப் பரவல் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவே அதிகம் செயல்படுவதாக அது குற்றம்சாட்டியது.
சென்ற புதன்கிழமை வடகொரியா இரு அணுவாயுதங்களை கடலில் பாய்ச்சிய ஒரு மணி நேரத்தில் தென்கொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணையைப் பாய்ச்சி சோதனை நடத்தியது.

