ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; எட்டுப் பேர் பலி

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; எட்டுப் பேர் பலி

1 mins read
0890d42b-df91-4176-b170-04969d5de58d
-

மாஸ்கோ: ரஷ்­யா­வின் பெர்ம் நகர பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நேற்று மாண­வர் ஒரு­வர் துப்­பாக்­கி­யால் தாறு­ மா­றா­கச் சுட்­ட­தில் ஐவர் அந்த இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

குறைந்­தது 19 பேர் சம்பவத்தில் காய­ம­டைந்­த­னர்.

துப்­பாக்­கிச் சூட்­டி­லி­ருந்து தப்­பிக்க, முதல் மாடி­யின் சன்­னல் வழி­யாக மாண­வர்­கள் குதித்து ஓடி­யதை உள்­ளூர் ஊடகக் காணொளிகள் காட்­டின.

மாஸ்­கோ­வி­லிருந்து 1,300 கிலோ­மீட்­டர் தூரத்­தி­லுள்ள அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­ய­வர் கைது செய்­யப்­பட்­டார். அவர் அந்­தப் பல்­க­லைக்க­ழக மாண­வர் என்­பது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. அந்த மாணவர் கொல்­லப் பட்­டு­விட்­ட­தாக போலிசார் பின்னர் கூறி­னர். அவ­ரது சட­லத்தை ஊட­கங்­கள் காட்­டின.

துப்­பாக்­கிச் சூட்டுக்கு அர­சி­யலோ சம­யமோ கார­ண­மில்லை எனக் கூறப்­பட்­டது.

ரஷ்­யா­வில் பொது­மக்­கள் துப்­பாக்கி வைத்­தி­ருப்­ப­தற்கு கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் உள்­ளன.

எனி­னும், வேட்டை, சுய­பா­து­காப்பு, விளை­யாட்டு போன்ற கார­ணங்களுக்­காக தகுதி பெறு­வோர் துப்­பாக்­கியை வாங்­க­லாம்.