மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.9ஆகப் பதிவான நிலநடுக்கம் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 7 மணி அளவில் நிகழ்ந்தது.
நிலநடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான மெல்பர்னில் உள்ள சில கட்டடங்கள் சேதம் அடைந்ததாக ஆஸ்திரேலியப் புவி அறிவியல் அமைப்பு கூறியது.
அண்டை மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது.
மெல்பர்னுக்கு 200 கிலோமீட்டர் தூரத்தில், மேன்ஸ்ஃபீல்ட் எனும் கிராமப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக அங்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில்
பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தை அடுத்து, மேன்ஸ்ஃபீல்ட் கிராமத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறினர்.
மெல்பர்னில் உள்ள நகர
மையத்தில் கட்டடச் சுவர் இடிந்து விழுந்தது. செங்கற்கள் தரையில் கிடந்ததைக் காட்டும் காணொளிகளும் படங்களும் இணையத்தில் வலம் வந்தன.
மெல்பர்னில் உள்ள சில பகுதி களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கட்டடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் தொடர்பாக யாருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.