மியன்மார் ராணுவ ஆட்சியில் முதல்முறையாக நீதிமன்றத்தில் தோன்றிய ஆஸ்திரேலியர்

மியன்மார் ராணுவ ஆட்சியில் முதல்முறையாக நீதிமன்றத்தில் தோன்றிய ஆஸ்திரேலியர்

1 mins read
056fe7ad-9d9f-4b54-a1ba-51ad03ef0571
மியன்­மார் செய்தி நிறு­வ­னம், கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளி­யிட்ட படத்­தில் சிறை­யில் உள்ள ஆஸ்­தி­ரே­லி­யரான பேரா­சி­ரி­யர் ஷான் டர்னெல்­லுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்டதாக தெரிவித்தது. இதற்கிடையே மியன்மாரில் உள்நாட்டுப் போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. கோப்­புப் படம்: ஏஎ­ஃப்பி -

யங்­கூன்: மியன்­மா­ரில் ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய பிறகு தடுத்து வைக்­கப்­பட்ட ஆஸ்­தி­ரே­லி­யர் முதல் முறை­யாக நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

முன்­னைய அர­சாங்­கத் தலை­வ­ரான ஆங் சான் சூச்­சிக்கு அவர் ஆலோ­சக­ராக இருந்­தார்.

குடி­நு­ழைவு, ரக­சிய சட்­டத்­தின் கீழ் அவர் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த பிப்­ர­வரி மாதம் ஓய்வு பெற வேண்­டிய வய­தில் உள்ள மியன்­மார் ராணு­வத் தலை­வர், ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்தைக் கவிழ்த்­தார்.

அப்­போது கைது செய்­யப்­பட்ட முதல் வெளி­நாட்டு நபர் மெக்­கு­வேரி பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­ய­ரான ஷான் டர்­னெல். யங்­கூ­னில் உள்ள சிறை­யில் அவர் அடைக்­கப்­பட்­டுள்­ளார். அவர் எப்­படி இருக்­கி­றார் என்­பது தெரி­யாத நிலை­யில் நேற்று நீதி­மன்­றத்­துக்கு அழைத்து வரப்­பட்­டார். ஷான் டர்­னெல் உடல் தளர்ந்து களைப்­பாக இருந்­தார் என்று அவ­ரது வழக்­க­றி­ஞர் கின் மாவுங் ஸாவ் கூறி­னார்.

பேரா­சி­ரி­யர் டர்­னெ­லுக்கு முழு­மை­யான கொவிட்-19 பாதுகாப்­புக் கவ­சம் அணி­விக்­கப்பட்­டி­ருந்­தது என்­றும் அவர் சொன்­னார். மியன்­மா­ரில் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரும் வேளை­யில் அவரை விடு­விக்க வேண்­டும் என்று கடந்த ஜூலை மாதம் அவ­ரது மனைவி கேட்­டுக்கொண்­டார். அதன் பிறகு சிறை­யில் அவ­ருக்­குத் தடுப்­பூசி போடும் புகைப்­ப­டம் ஒன்று மட்­டுமே வெளி­யா­­னது.

அதன் பிறகு அவரை பற்றி தக­வல் இல்லை.