கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக 13,754 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது, முந்தைய நாள் பதிவான 14,990 தொற்றுச் சம்பவங் களுடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைவு. மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,156,678க்கு அதிகரித்துள்ளது. ஜோகூரில் மட்டும் 1,913 பேர் பாதிக்கப்பட்டனர்.
புதன்கிழமை நள்ளிரவு வரை கொவிட்-19 தொற்றுக்கு 487 பேர் உயிரிழந்துவிட்டனர். செப்டம்பர் 11 (592), செப்டம்பர் 14 (493) தேதிகளில் பதிவான மரணச் சம்பவங்களுடன் இது இரண்டாவது உச்சமாகும்.
தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 24,565க்கு அதி கரித்துள்ளது. இதற்கிடையே இவ்வாண்டு 17 வயதுக்குக் கீழ் உள்ள 410,762 குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது என்ற அதிர்ச்சித் தகவலை நேற்று வெளியிட்ட மலேசிய சுகாதார அமைச்சு, பெரியவர்களுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தைகளைப் பாதுகாக்கும் என்று கருத முடியாது என்றது.

