பாதிப்பு புதிய உச்சம்

2 mins read
a52fdd48-0e6c-402c-8ffc-bfb9abc8f990
-

கொவிட்-19 தொற்றுடன் வாழத் திட்டமிடும் தென்கொரியா

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கடந்த ஜூலை மாத முற்­ப­கு­தி­யில் தொடங்­கிய கொவிட்-19 தொற்று அலை இன்­னும் அடங்­கி­ய­பா­டில்லை.

இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் அங்கு நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 2,434 பேர்க்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கொரிய நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையம் தெரி­வித்­தது.

ஆயினும், கொரோனா தொற்றி­யோ­ரில் இறப்பு விகி­தம் 0.82% என மிகக் குறைந்த அள­வி­லேயே இருந்து வரு­கிறது.

இவ்­வா­ரம் மூன்று நாள்­கள் விடு­முறை என்­ப­தால் கிரு­மிப் பர­வல் நட­வ­டிக்­கை­க­ளைக் கடு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம் என்று பிர­த­மர் கிம் பூ கியும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

விடு­மு­றை முடிந்து வேலைக்­குத் திரும்­பு­வோர், கொரோனா தொற்­றுக்­கான இலே­சான அறி­குறி­கள் இருந்­தா­லும் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அன்­றாட பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து, அடுத்த வாரத்­தில் உச்­சத்தை எட்­ட­லாம் என்று சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கொள்­கைக்­கான துணை அமைச்­சர் லீ கீ இல் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, கொவிட்-19 தொற்­று­டன் இயல்பு வாழ்க்­கையை மேற்­கொள்­வது எப்­படி என்­பது தொடர்­பில் அர­சாங்­கம் திட்­டம் வகுத்து வரு­கிறது. டிசம்­பர் மாத இறு­திக்­குள் பெரி­ய­வர்­களில் 80 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டிருப்­பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அத்­திட்­டம் கட்­டம் கட்­ட­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு, கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­படும்.

இருப்­பி­னும், தொடக்க கட்­டத்­தில் முகக்­க­வ­சம் அணி­யும் நடை­முறை நீடித்­தி­ருக்­கும்.

தென்­கொ­ரி­யா­வில் இது­வரை 295,132 பேரை கொரோனா தொற்றி­விட்­டது. அவர்­களில் 2,434 பேர் இறந்­து­விட்­ட­னர்.

மொத்­தம் 52 மில்­லி­யன் மக்கள்­தொ­கை­யைக் கொண்ட தென்­கொரி­யா­வில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 72.3 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யே­னும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்; கிட்­டத்­தட்ட 44 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு­விட்­ட­னர்.