ஆஸ்திரேலியா: 50 விழுக்காட்டினர்க்குத் தடுப்பூசி

ஆஸ்திரேலியா: 50 விழுக்காட்டினர்க்குத் தடுப்பூசி

1 mins read
5dac1b5f-f946-4f5a-a2cf-6df31b252101
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பெரி­ய­வர்­களில் பாதிப் பேர்க்­கு­மேல் முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

விக்­டோ­ரிய மாநி­லத்­தில் கொரோனா பாதிப்பு கிட்­டத்­தட்ட சாதனை அளவை நெருங்­கி­வ­ரும் வேளை­யில், தடுப்­பூசி நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

அதி­கம் பர­வக்­கூ­டிய உரு­மா­றிய 'டெல்டா' கிரு­மி­யால் ஆஸ்­தி­ரே­லியா மூன்­றா­வது கொரோனா அலையை எதிர்­கொண்டு வரு­கிறது. கேன்­பரா, சிட்னி, மெல்­பர்ன் ஆகிய முக்­கிய நக­ரங்­களில் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தால் கிட்­டத்­தட்ட 12.5 மில்­லி­யன் மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

விக்­டோ­ரி­யா­வில் நேற்று புதி­தாக 733 பேர்க்­குத் தொற்று உறுதி­செய்­யப்­பட்­டது; ஒரு­வர் இறந்­து­விட்­டார். ஆக அதி­க­மாக, நேற்று முன்­தி­னம் அங்கு 766 பேரைக் கிருமி தொற்றியது. இதனிடையே, நியூ சௌத் வேல்சில் கிருமிப் பரவல் மட்டுப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று அங்கு 1,043 பேர்க்குத் தொற்று உறுதியானது.