ஹாங்காங்: சீனாவில் ஒரு வாரம் நீடிக்கும் விடுமுறை காலம் வருவதையொட்டி மக்காவ் நகரில் கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்நகரின் விளையாட்டுத் துறையைப் பாதிக்கக்கூடிய வகையில் அங்கு கிருமி பரவாமல் இருக்க இவ்வாறு செய்யப்படுகிறது.
எல்லா குடியிருப்பாளர்களும் மக்காவிற்கு வருவோரும் கட்டாயமாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. மூன்று நாட்களுக்குப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனை திட்டத்தின்கீழ் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது.
தேவை ஏற்படாவிட்டால் நகரைவிட்டுப் பயணம் செய்யவேண்டாம் என்று அரசாங்கம் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியது. நகரிலிருந்து வெளியேறும் பயணிகள், தங்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்யும் பரிசோதனை முடிவைக் காட்டவேண்டும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது. ஷென்சன், சூஹாய் உள்ளிட்ட சீன நகரங்களுக்குச் செல்வதற்கான பயணச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

