லண்டன்: உலக நாடுகளை முடக்கிவைத்துள்ள கொவிட்-19 கொள்ளை நோயால் மனிதர்களின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு மனிதர்களின் ஆயுள்காலத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக ஆகஸ்ஃபர்ட் பல்கலைக் கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
குறிப்பாக அமெரிக்க ஆண் களின் ஆயுள் இரண்டு ஆண்டு களுக்கு மேல் குறைந்துவிட்டது.
ஐரோப்பா, அமெரிக்கா, சிலி ஆகிய நாடுகள் உட்பட 29 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 நாடுகளில் ஆயுட்காலம் ஆறு மாதங்களுக்கு மேல் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்த 29 நாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 27 நாடுகளில் மனிதர்களின் ஆயுள் குறைந்துவிட்டது.
பெரும்பாலான நாடுகளில் மனிதர்களின் ஆயுட்காலம் குறை வதற்கும் கொவிட்-19 மரணங்களுக் கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
ராய்ட்டர்ஸ் புள்ளி விவரங்களின்படி உலகில் இதுவரை ஐந்து மில்லியன் பேர் கொவிட்-19 தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
"கிருமித்தொற்று ஏற்டுத்தியுள்ள பெரியதொரு தாக்கத்தை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. இது, பல நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது," என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசி ரியரான டாக்டர் ரிதி காஷ்யாப் தெரிவித்தார்.
ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கட்டுரை அனைத்துலக கொள்ளைநோய் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
பல நாடுகளில் பெண்களைவிட ஆண்களின் வாழ்நாள் குறைந்துவிட்டது. அமெரிக்க ஆண்கள் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாழ்நாளில் 2.2 ஆண்டுகளை இழந்து விட்டனர்.
ஒட்டுமொத்தமாக 11 நாடுகளில் உள்ள பெண்களுடன் ஒப்பிட்டால் 15 நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலம் ஒரு வருடத்திற்கு ேமல் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் வேலை செய்யும் வயதினர் மற்றும் 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்களிடையே மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாறாக, ஐரோப்பாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே இறப்பு அதிகரித்து காணப்படுகிறது.
"மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இதற்கு உலக நாடு களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் உட்பட பல நாடுகள் மரணங்கள் தொடர்பான தரவுகளை வெளியிட வேண்டும்," என்று திரு காஷ்யாப் கேட்டுக்கொண்டார்.