பெர்லின்: ஜெர்மனியில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லின் ஆட்சி இனி இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ஒலாஃப் ஷோல்ட்ஸ் கூறியுள்ளார்.
நாட்டின் முதல் பெண் பிரதமராக 2005ல் பொறுப்பு ஏற்ற ஏஞ்சலா மெர்க்கல் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இம்மாதம் 26ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு 206 இடங்களும் மத்திய வலதுசாரி கன்சர்வேட்டிவ் கூட்டணிக்கு 196 இடங்களும் கிடைத்துள்ளன. இரு கட்சிகளும் ஏறக் குறைய சமமான வெற்றியை பெற்று உள்ளதால் மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே இவற்றில் ஒன்று ஆட்சியை அமைக்க முடியும்.
இந்த நிலையில் 118 இடங்களில் வெற்றி பெற்று 3வது பெரிய கட்சி யாக கிரின்ஸ் கட்சி உருவெடுத்துள்ளது. ஒலாஃப் ஷோல்ட்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சிக்கு 25.7 விழுக்காடு வாக்கு களும் மத்திய வலதுசாரி கன்சர் வேட்டிவ் கூட்டணிக்கு 24.1 விழுக்காடு வாக்குகளும் கிரின்ஸ் கட்சிக்கு 14.8 விழுக்காடு வாக்கு களும் கிடைத்துள்ளன. கிரின்ஸ் கட்சியின் பெண் வேட்பாளரான அன்னலேனா பேர்பாக் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பது ெபரிய எதிர்பார்ப்பாக உள்ளது.