தாய்லாந்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்: 70,000 வீடுகள் சேதம், ஆறு பேர் உயிரிழப்பு

1 mins read
1a5d6992-4591-4c14-812f-2d362fba57b3
தாய்லாந்தின் அயுத்தயாவில் உள்ள பௌத்த ஆலயத்தை வெள்ளத்திலிருந்து இருந்து பாதுகாக்க, அதைச் சுற்றி தடுப்புகளைப் போடும் பணியில் பௌத்த பிக்குகள் தீவிரமாக இறங்கினர்.வரலாற்றுச் சிறப்புமிக்க, பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் விரைந்துள்ளனர்.படம்: ராய்ட்டர்ஸ் -

பேங்­காக்: தாய்­லாந்­தில் மிக மோச­மான அள­வில் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து, மீட்­புப் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

வெள்­ளம் கார­ண­மாக 70,000 வீடு­கள் சேத­ம­டைந்­து­விட்­ட­தா­வும் ஆறு பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், தலை­ந­கர் பேங்­காங்­கில் வெள்ள அபா­யத்­தைத் தடுக்­கும் பணி­களில் அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­வ­தாக தாய்­லாந்து அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இடி­யு­டன் கூடிய கன­ம­ழை­யின் விளை­வாக தாய்­லாந்­தின் 30

மாநி­லங்­களில் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது. நாட்­டின் மத்­தி­யப் பகுதி ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தாய்­லாந்து இயற்­கைப் பேரி­டர் தடுப்பு, மீட்­புப் பணித் துறை கூறி­யது. பேங்­காக்­கில் உள்ள சாவ் பிராயா ஆற்­றின் நீர் அளவு தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நாட்­டின் வடக்­குப் பகு­தி­யில் உள்ள அணை­கள் திறந்­து­வி­டப்­

ப­டு­வ­தால் இந்­நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பேங்­காக்­கில் உள்ள முக்­கிய சின்­னங்­கள், பாரம்­ப­ரி­ய­மிக்க கட்­ட­டங்­கள் ஆகி­ய­வற்­றைப் பாது­காக்­கும் நோக்­கில் அவற்­றைச் சுற்றி ராணுவ வீரர்­கள் தடுப்பு போட்டு வரு­கின்­ற­னர்.

பேங்­காக்­கிற்கு 60 கிலோ மீட்­டர் தூரத்­தில் உள்ள பழைய தலை­ந­க­ர­மான அயுத்­த­யா­வி­லும்

வெள்­ளத் தடுப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

2011ஆம் ஆண்­டில் பேங்­காக்­கில் ஏற்­பட்ட வெள்­ளம் பெரு­ம­ள­வி­லான சேதத்தை விளை­வித்­தது.

அந்த நிலை மீண்­டும் ஏற்­ப­டா­த­படி தேவை­யான ஏற்­பா­டு­

க­ளைச் செய்ய முடி­யும் என தாய்­லாந்து அதி­கா­ரி­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.