தோக்கியோ: கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள அவசரநிலையை இம்மாதம் 30ஆம் தேதியன்று ஜப்பான் முடிவுக்குக் கொண்டு வருகிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்திருப்பதாலும் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை தணிந்திருப்ப தாலும் அவசரநிலை முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக அந்நாட்டின் பொருளியல் அமைச்சர் யசுடோஷி நிஷிமுரா நேற்று கூறினார்.
அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜப்பானிய அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜப்பானில் முதல்முறையாக அவசரநிலை முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது.
இருப்பினும், உணவகங்களுக்கும் பலர் ஒன்றுகூடும் நிகழ்வு
களுக்கும் விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் இன்னும் ஒரு மாதத்துக்குத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
"அவசரநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்றார் திரு நிஷிமுரா.