தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் ஏவுகணை பாய்ச்சிய வடகொரியா

1 mins read
c378ea90-a2fa-4c67-86a8-8fce1af8b835
-

சோல்: வட­கொ­ரியா மீண்­டும் ஏவு­கணை பாய்ச்­சி­யுள்­ள­தாக தென்­கொ­ரியா தெரி­வித்­துள்­ளது.

கடலை நோக்கி அந்த குறு­கிய தூர ஏவு­கணை பாய்ச்­சப்­பட்­ட­தாக தென்­கொ­ரிய ராணு­வம் கூறி­யது.

தன்­னு­டைய சுய தற்­காப்பு உரி­மை­களை எவ­ரா­லும் நிரா­க­ரிக்க முடி­யாது என்று ஐநா­வுக்­கான வட­கொ­ரி­யத் தூதர் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆயு­தங்­க­ளைச் சோதனை செய்ய தனது நாட்­டிற்கு அனைத்து உரி­மை­களும் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

தென்­கொ­ரி­யா­வு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக இருப்­ப­தாக சில நாட்­க­ளுக்கு முன்பு வட­கொ­ரியா தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால் அது மீண்­டும் ஏவு­கணை பாய்ச்­சி­யி­ருப்­ப­தால் கொரிய தீப­கற்­பத்­தில் பதற்­ற­மான சூழ்­நிலை நில­வு­வ­தாக தென்­கொ­ரிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். வட­

கொ­ரியா ஏவு­கணை பாய்ச்­சி­யதை அமெ­ரிக்க ராணு­வம் உறுதி செய்­துள்­ளது.