பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் உள்ள பெரியவர்களில் 93.8 விழுக்காட்டினர் குறைந்தது முதல் கொவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.
84.4 விழுக்காடு பெரியவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு டுவிட்டரில் பதிவிட்டது.
நேற்று முன்தினம் 323,335 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 172,388 பேர் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். 150,947 பேர் தங்கள் இரண்டாவது தடுப்பூசியைப்
போட்டுக்கொண்டுள்ளனர்.