அடுப்பிலும் தீ, முடியிலும் தீ! அடியாத்’தீ’!

எதிர்பாராது நிகழ்ந்த ஒரு தீ விபத்து சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

சமையல் வேலையில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், அடுப்பிற்குக் கீழே உள்ள அலமாரியில் எதையோ எடுக்கும்போது தலையில் தீப்பற்றிவிடுகிறது.

அதை அறியாமல் அவர் தொடர்ந்து வேலையில் மூழ்கியிருக்கிறார்.

40 நொடிகள் கழித்தே தமக்கு நேர்ந்த கொடூரத்தை அறியும் அவர், உடனடியாகத் தமது கைகளாலேயே தலையைத் தட்டிவிட்டு, நெருப்பை அணைக்கிறார்.

இக்காணொளி இணையவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ‘நெருப்புப் பெண்மணி’ என்ற வரியுடன் இந்தக் காணொளியைப் பதிவேற்றம் செய்துள்ளார் டுவிட்டர்வாசி ஒருவர்.

சம்பவம் இம்மாதம் 16ஆம் தேதி நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எங்கு நிகழ்ந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!