கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் பெரும் பின்னடைவு

கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் பெரும் பின்னடைவு

2 mins read
874166d3-00cd-4701-b96f-f48da5230abc
-

மெல்பர்னின் கொவிட்-19 சம்பவங்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் நேற்று பதி­வான கொவிட்-19 சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை, புதிய உச்­சத்­தைத் தொட்­டது. விக்­டோ­ரி­யா­வின் தலை­ந­க­ரான மெல்­பர்ன், கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­க­ளாக கடு­மை­யான முடக்­க­நி­லை­யில் உள்­ளது. கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­து­வ­தற்கு முன் மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணியை அர­சாங்­க­ம் முடுக்­கி­விட்­டுள்­ளது. இதற்­கி­டையே, நேற்று புதிய உச்­சத்­தில் 1,438 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

கடந்த வார இறு­தி­யில் ஆஸ்­தி­ரே­லிய காற்­பந்து இறு­திப் போட்டி, தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பானது. அதைப் பார்ப்­ப­தற்­கா­கவே பல வீடு­களில் ஒன்­று­கூ­டல்­கள் நடந்­தன. இத்­த­கைய ஒன்­று­கூ­டல்­களில் பங்­கேற்­ற­வர்­கள், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட புதிய எண்­ணிக்­கை­யில் கிட்­டத்­தட்ட 33 விழுக்­காட்­டி­னர் என்று விக்­டோ­ரிய அதி­கா­ரி­கள் கணித்­துள்­ள­னர்.

"கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பல, முற்­றி­லும் தவிர்த்­தி­ருக்­கக்­கூடி­யவை. நான் யாரை­யும் குற்­றம் சொல்ல­வில்லை. இவ்­வ­ளவு விரை­வாக கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை எப்­படி உயர்ந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று பலர் யோசித்­துக்­கொண்­டி­ருப்­பார்­கள். அவர்­க­ளுக்கு விளக்­கம் அளிக்­கவே முயல்­கி­றேன்," என்று செய்தி­யா­ளர் கூட்­டத்­தில் மாநி­லத் தலை­வர் டேனி­யல் ஆண்ட்­ரூஸ் தெரி­வித்­தார்.

புதன்­கி­ழ­மை­யன்று பதி­வான 950 தொற்­றுச் சம்­ப­வங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் நேற்று 50% அதி­க­மான சம்­ப­வங்­கள் பதி­வா­கின. கொள்­ளை­நோய் சூழ­லைச் சமா­ளித்து வரு­வ­தற்­கி­டையே, இந்த எண்­ணிக்கை 'பெரும் பின்­ன­டைவு' என்று அதிகாரிகள் கூறினர்.

இதற்­கி­டையே, மாநி­லத்­தின் 5.5 மில்­லி­யன் பெரி­ய­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடும் பணி துரி­த­மாக நடந்து வரு­கிறது. பெரி­ய­வர்­களில் 16 வய­துக்கு மேற்­பட்ட பாதிப் பேருக்­குத் தங்­க­ளின் முதல் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­டது. தேசிய அள­வில் சரா­ச­ரி­யாக உள்ள 53 விழுக்­காட்­டுக்­குக் குறை­வான விகி­த­மாக இது உள்­ளது.

கொவிட்-19 கிரு­மி­யைத் துடைத்­தொ­ழிக்­கும் உத்­தி­மு­றை­யைக் கைவிட்­டு­விட்டு, முடக்­க­நி­லை­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு அதிக தடுப்­பூசி விகி­தத்­தைத் தன் உத்­தி­முறை­யாக ஆஸ்­தி­ரே­லியா எடுத்­துக்­கொண்­டுள்­ளது. நேற்று நியூ சவுத் வேல்­ஸில் புதி­தாக 941 கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கின. ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நேற்று 11 உயி­ரி­ழப்­பு­களும் உறு­தி­செய்­யப்­பட்­டன.