அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை கேட்டு பெண்கள் பேரணி

1 mins read
67a3ba28-f224-4fb3-809b-eabcd39f0f90
வாஷிங்டனில் நடந்த பேரணியில் ஆர்ப்பாட்டக் காரர்கள் பல்வேறு வாசகங்களை கையில் ஏந்தி இருந்தனர். -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கருக்­க­லைப்­புக்கு ஆத­ர­வாக ஆயிரக்க­ணக்­கா­ன­வர்­கள் நாடு முழுவதும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். டெக்­சஸ் மாநி­லத்­தில் கருக்க­லைப்பை கடு­மை­யா­கக் கட்டுப்­ப­டுத்­தும் புதிய சட்­டத்­திற்கு எதி­ராக அந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

வாஷிங்­ட­னில் ஆர்ப்­பாட்­டக் ­கா­ரர்­கள் 'கருக்­க­லைப்பை சட்­ட­பூர்­வ­மாக்க வேண்­டும்' என்ற வாச­கங்­களை ஏந்தி உச்ச நீதி­மன்ற கட்­ட­டத்தை நோக்கி நடந்­த­னர்.

பேரணி தொடங்­கும்­போது சிலர் அவர்­க­ளுக்கு எதி­ராக போட்டி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­னர்.

இத­னால் பேர­ணி­யில் குழப்­பம் ஏற்­பட்­டது.

'அப்­பாவி குழந்­தை­க­ளின் ரத்­தம் உங்­கள் கைகளில் படியும்' என்று போட்டி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் ஓர் ஆண் முழக்­க­மிட்­டார்.

ஆனால் பெண்­கள் ஒன்று சேர்ந்து கைதட்டி ஆடிப்­பாடி ஆர்ப்­பாட்­டம் செய்­த­தால் அவ­ரது குரல் எடு­ப­ட­வில்லை.

பேர­ணி­யில் கலந்­து­கொண்ட ஒரு பெண், பெண்­க­ளுக்கு தங்­க­ளு­டைய வாய்ப்பை தேர்ந்­தெ­டுக்க முழு உரி­மை­யுண்டு என்று கூறி­னார்.