ஹங்கேரியில் தொற்று மரணங்கள் அதிகரிப்பு

2 mins read
f0fc5771-4c52-4956-a368-cfac0088abb4
-

புடா­பெஸ்ட்: ஹங்­கே­ரி­யில் கொரோனா தொற்­றின் நான்­கா­வது அலை தொடங்­கி­ய­தில் இருந்து, சென்ற வார இறு­தி­யில் தான் ஆக அதி­க­மான தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இந்த விவ­ரம் அந்­நாட்டு அர­சாங்­கம் நேற்று முன்­தினம் வெளி­யிட்ட தர­வு­க­ளின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த மூன்று நாட்­களில் மட்­டும் புதி­தாக 1,492 புதிய தொற்­றுப் பாதிப்­பும் 31 தொற்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

இவற்­று­டன் சேர்த்து அங்கு இது­வரை 824,876 பேரை கொரோனா தொற்­றி­யுள்­ளது. 30,230 பேர் தொற்­றுப்­பா­திப்­பால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இருப்­பி­னும் கடந்த இரண்­டா­வது, மூன்­றா­வது தொற்று அலை­க­ளின் போது ஏற்­பட்ட உச்ச பாதிப்பு அள­வைக் காட்­டி­லும் இது குறைவு.

எனினும் தொற்­றுச்­சூ­ழல் கொஞ்­சம் கொஞ்­ச­மாக மோச­ம­டை­வ­தையே இப்­போது வெளி­யி­டப்­பட்ட தர­வு­கள் காட்­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஹங்­கே­ரி­யின் அண்டை நாடு­க­ளான செர்­பியா, ரோமா­னி­யா­வில் புதி­தா­கத் தொற்­றுக்­குப் பாதிக்­கப்­படு­வோர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரு­கிறது.

தடுப்­பூசி அதிக அள­வில் போட்­டுள்ள ஐரோப்­பிய நாடு­களில் ஹங்­கேரி முன்­னி­லை­யில் உள்­ளது.

அந்­நாடு ரஷ்­யா­வின் ஸ்புட்­னிக் வி, சீனா­வின் சினோ­ஃபார்ம் ஆகிய தடுப்­பூ­சி­க­ளு­டன் ஐரோப்­பிய தயா­ரிப்புத் தடுப்­பூ­சி­க­ளை­யும் கொள்­மு­தல் செய்து மில்­லி­யன் கணக்­கா­னோ­ருக்­குப் போட்­டுள்­ளது.

ஹங்­கே­ரி­யின் மக்­கள் தொகை 10 மில்­லி­யன் பேர். அதில் பாதிப்­பே­ருக்கு தடுப்­பூசி போடப்­பட்ட நிலை­யில், அனை­வ­ரை­யும் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளு­மாறு அர­சாங்­கம் வலி­யு­றுத்தி வரு­கிறது.

இது­வரை 5.66 மில்­லி­யன் பேர் அங்கு, கொரோனா தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அவர்­களில் 804,000 பேருக்கு பூஸ்­டர் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

கொரோனா தொற்­றின் நான்­கா­வது அலை நெருக்­க­டியை எதிர்­நோக்­கும் ஹங்­கே­ரி­யில் எவ்­வி­த­மான முடக்­க­நி­லை­யும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

கேளிக்கை விடு­தி­கள், உண­வ­கங்­கள், பள்­ளி­கள் ஆகியவை திறக்­கப்­பட்­டுள்­ளன. சுகா­தா­ரத்­துறை கட்­ட­டங்­களில் மட்­டும் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.