லங்காவி: மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லங்காவித் தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் 50 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அந்த ஹோட்டலை தற்காலிகமாக மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கெடா மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் ஒத்மான் வாரிஜோ, இந்தத் தொற்று 'டா டெலுக் நிபுங்' என்று அறியப்பட்ட பணியிட தொற்றுக்குழுமமாக வகைப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில் பினாங்கிலும் ஒரு ஹோட்டலில் 21 ஊழியர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளதையடுத்து அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.