சிட்னி: வரும் திங்கட்கிழமை சிட்னி முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் ஆகப் ெபரிய நகரமான அது, நான்கு மாதங்களாக முடக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் எழுபது விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடும் இலக்கு நிறைவேறும். அதன் பிறகு சிட்னியை தலைநகர மாகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநில மக்கள் சுதந்திரமாக நடமாடலாம்.
மதுபானக் கூடங்கள், சில்லறைக் கடைகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவை கடுமையான தனிநபர் இடைவெளி கட்டுப்பாட்டுடன் திறக்கப்படும்.
தடுப்பூசி போட்டவர்களாக இருந்தால் பத்து பேர் வரை வீட்டில் ஒன்றுகூட அனுமதிக்கப்படும்.
திருமண விருந்து, இறுதிச் சடங்கு போன்றவற்றுக்கான வரம்பு அதிகரிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்கள் 100 பேர் வரை அதில் பங்கேற்கலாம்.
எண்பது விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட்டதும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் இரவு நேர கேளிக்கை விடுதிகள் செல்ல அனு மதிக்கப்படும்.
முன்பு திட்டமிட்டபடியே அலுவலகங்களில் முகக்கவசம் கட்டாய மாக்கப்படாது.
ஆனால் தடுப்பூசி போடாதவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி வரை கட்டாயமாக வீட்டில் தங்கியிருக்க வேண்டும். தடுப்பூசி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர்கள் வீட்டில் தங்கியிருப்பதை மாநில அரசு உறுதி செய்யவிருக்கிறது.
"நமது சுதந்திரத்துக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக முக்கியம். தியாகம் செய்தவர்களுக்கும் அரும்பாடுபட்டவர்களுக்கும் முடிந்த வரை பாதுகாப்பாகவும் கூடிய விரைவிலும் திறக்க உறுதி பூண்டுள்ளோம்," என்று நேற்று சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் டோமினிக் பெரோடெட் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நகரங்களான சிட்னி, மெல் பர்ன் தவிர தலைநகர் கேன்பராவில் டெல்டா கிருமி பரவியதால் கடந்த பல வாரங்களாக அது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் இரண்டு டிரில்லியன் டாலர் பொருளியல் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
அந்நகரங்களில் உள்ள அதி காரிகள் கிருமித்தொற்றை முடிவு கட்ட தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அதன் அடுத்த கட்டமாக கட்டுப் பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட விருக்கின்றன.

