ஸ்டாக்ஹோம்: இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு, நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுகிறது.
'பாரடைஸ்', 'டிசர்ஷன்' உள்ளிட்ட பல நாவல்களை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
அவரது நூல்கள், பொதுவாக அகதிகள் மற்றும் காலனி ஆதிக்கம் தொடர்பில் இருக்கும்.
வளைகுடா நாடுகளில் உள்ள அகதிகள் குறித்து அண்மையில் அவர் எழுதிய நூலுக்கு தற்போது நோபெல் பரிசு கிடைத்துள்ளது.
திரு அப்துல் ரசாக், டான்சானியா நாட்டைச் சேர்ந்தவர். 1960களில் அகதியாக அவர் இங்கிலாந்தில் குடியேறினார்.
சுமார் பத்து மில்லியன் சுவீடன் கிரவுன்ஸ் (S$1.55 மில்லியன்) பரிசுத் தொகையாக அவருக்கு வழங்கப் படுகிறது.

