வெளிநாட்டுப் பயணத்திற்கு தயாராகும் மலேசிய மக்கள்

2 mins read
00be90c7-01d5-4561-8e74-a5d8fcd98eaf
-

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 90% விழுக்காட்டை நெருங்குகிறது

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில்

தடு­ப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் 90% நெருங்­கி­விட்ட நிலை­யில், அந்­நாட்டு மக்­கள் வெளி­

நா­டு­க­ளுக்­குப் பய­ணம் செல்ல தயா­ராகி வரு­கின்­ற­னர்.

கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பாட்டு விதி­கள் கார­ண­மாக மலே­சி­யா­வில் கிட்­டத்­தட்ட ஓராண்டு கால­மாக வெளி­நாட்டு, உள்­நாட்டு பய­ணங்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் பெரி­யோர் தடு­ப்­பூசி போட்­டுக்­கொண்ட விகி­தம் 90 விழுக்­கா­டாக அதி­க­ரிக்­கும்­போது வெளி­நாட்டுப் பய­ணத்­திற்­கான கட்­டுப்­பா­டு­கள் டிசம்­பர் மாதத்­தில் தளர்த்­தப்­ப­டக்­கூ­டும் என்று பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் சென்ற மாதம் கூறி­யி­ருந்­தார்.

மேலும் இம்­மாத இறுதி முதல் கொவிட்-19 கிரு­மித்­தொற்றை நிரந்­தர நோயாக கையா­ளு­வ­தற்கு மலே­சியா தயா­ராகி வரு­கிறது.

நேற்று காலை நில­வ­ரப்­படி மலே­சியா நிர்­ண­யித்­தி­ருந்த 90% தடுப்

­பூசி இலக்கை அடை­வ­தற்கு 0.9% மட்­டுமே குறை­வாக இருந்­தது. இதில் 89.1% முழு­மை­யாக தடு­ப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து, வெளி­நாட்டுப் பய­ணங்­கள் குறித்து விசா­ரிப்­போர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்ளதாக பய­ணத்­து­றை­யி­னர் கூறி­னர்.

பய­ணம் செல்ல விரும்­பு­வோர் பய­ணக் கட்­ட­ணத்­தை­விட, பய­ணத் தொகுப்­பில் இருக்­கும் பாது­காப்பு அம்­சங்­களில், குறிப்­பாக கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­னால் ஆகும் மருத்­துவ சிகிச்சை எந்­த­ள­வுக்கு மலி­வாக உள்­ளது என்­ப­தில் அதிக கவ­னம் செலுத்­து­வ­தாக கூறப்­

ப­டு­கிறது.

இந்­தோ­னீ­சியா, சிங்­கப்­பூர், தைவான், கொரியா, பிரிட்­டன் உள்­ளிட்ட இடங்­க­ளுக்கு மலே­சி­யர்­கள் செல்ல விரும்­பு­கி­றார்­கள்.

கூடு­தல் தடு­ப்பூ­சிக்கு அனு­மதி

ஃபைசர்-பயோஎன்­டெக்­கின் கொமிர்­னாட்டி தடுப்­பூ­சியைக் கூடு­தல் தடு­ப்­பூ­சி­யாக பயன்­ப­டுத்த மலே­சிய சுகா­தார அமைச்சு அனு­மதி அளித்­துள்­ள­தாக சுகா­தார தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­னார்.

18 வய­துக்கு மேற்­பட்ட, இரண்­டா­வது தடு­ப்­பூசி போட்­டுக்­கொண்டு குறைந்­தது ஆறு மாதங்­கள் ஆன­வர்­க­ளுக்குக் கூடு­தல் தடுப்­பூசி போட ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மூத்­தோர், சுகா­தா­ரத் துறை ஊழி­யர்­கள் போன்ற எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளுக்­குக் கூடு­தல் தடுப்­பூசி போடும் பணி சர­வாக்­கில் தொடங்­க­வுள்­ளது.

கூடு­தல் தடுப்­பூசி போட்டுக் கொள்வது கட்­டா­ய­மல்ல. ஆனால் போட்­டுக்­கொள்­வதை ஊக்­கு­விப்­ப­தாக சுகா­தார அதி­கா­ரி­கள் முன்பு கூறி­யி­ருந்­த­னர்.

முந்தைய தடுப்­பூசி இயக்­கங்களின்போது, பிரிட்­ட­னில் அஸ்ட்­ரா­ஸெ­னிக்கா, சீனா­வின் சினோ­வேக் மற்றும் கேன்சினோ தடு­ப்­பூ­சி­களை மலே­சியா பயன்­ப­டுத்­தி­யது.