கறுப்பின ஆடவரைச் சுட்ட போலிஸ் மீது குற்றச்சாட்டு இல்லை

1 mins read
16fa683e-d832-4942-b5a8-25ad4ec77a4e
-

வா‌ஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கறுப்­பின ஆட­வ­ரைச் சுட்ட வெள்­ளை­யின போலிஸ்­கா­ரர் மீது குற்­றம்­சாட்டப் போவ­தில்லை என்று அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் கூறி­னர்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஜேக்­கப் பிளேக் எனும் கறுப்­பின ஆட­வ­ரைக் குடும்ப வன்­முறை குற்­றச்­சாட்டு தொடர்­பில் கைது செய்ய முயன்­ற­போது, முது­கில் பல­முறை சு­டப்­பட்­டார்.

இத­னால் அவ­ரது உடல் இடுப்­புக்­குக் கீழ் செய­லி­ழந்­து­விட்­டது.

மற்றொரு கறுப்பின ஆடவரான ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த சம்­ப­வம் நடந்தது.

இதுதொடர்­பான காணொளி இணை­யத்­தில் வேக­மாக பர­வி­ய­தைத்­தொ­டர்ந்து, அது இன­வெறி எதிர்ப்பு கோபத்தை மீண்­டும் தூண்­டி­யது. வன்­முறை வெடித்­தது.

ஆனால் இச்­சம்­ப­வத்­தில் வெள்­ளை­யின போலிஸ் அதி­காரி ஜேக்­கப் பிளேக்கை வேண்­டு­மென்றே சுட்­ட­தற்­கான ஆதா­ரம் எது­வும்­இல்லை என்று நீதித்­துறை அதி­கா­ரி­கள் கூறி­னர்.