வாஷிங்டன்: அமெரிக்காவில் கறுப்பின ஆடவரைச் சுட்ட வெள்ளையின போலிஸ்காரர் மீது குற்றம்சாட்டப் போவதில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஜேக்கப் பிளேக் எனும் கறுப்பின ஆடவரைக் குடும்ப வன்முறை குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய முயன்றபோது, முதுகில் பலமுறை சுடப்பட்டார்.
இதனால் அவரது உடல் இடுப்புக்குக் கீழ் செயலிழந்துவிட்டது.
மற்றொரு கறுப்பின ஆடவரான ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.
இதுதொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவியதைத்தொடர்ந்து, அது இனவெறி எதிர்ப்பு கோபத்தை மீண்டும் தூண்டியது. வன்முறை வெடித்தது.
ஆனால் இச்சம்பவத்தில் வெள்ளையின போலிஸ் அதிகாரி ஜேக்கப் பிளேக்கை வேண்டுமென்றே சுட்டதற்கான ஆதாரம் எதுவும்இல்லை என்று நீதித்துறை அதிகாரிகள் கூறினர்.