குவாட்டமாலா சிட்டி: கப்பல் கொள்கலனுக்குள் 126 குடியேறிகளை குவாட்டமாலா போலிசார் கண்டுபிடித்தனர். கொள்கலனில் பூட்டப்பட்டு கைவிடப்பட்ட அந்தக் குடியேறிகளில் பெரும்பாலானோர் ஹைட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தக் குடியேறிகள் மெக்சிக்கோவுக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குவாட்டமாலாவின் தென்பகுதியில் உள்ள இரு நகரங்களுக்கு இடையிலான சாலையில் கப்பல் கொள்கலன் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பது குறித்து போலிசாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, அதிகாரி கள் அங்கு விரைந்தனர்.
"கொள்கலனிலிருந்து அழுகைச் சத்தம் கேட்டது. உள்ளிருந்து பலர் கொள்கலனைத் தட்டி உதவி கேட்டு கத்தினர். பூட்டை உடைத்து கதவைத் திறந்து பார்த்தபோது 126 குடியேறிகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தோம். 106 பேர் ஹைட்டியிலிருந்தும், 11 பேர் நேப்பாளத்திலிருந்தும் ஒன்பது பேர் கானாவிலிருந்தும் வந்தவர்கள்," என்றும் குவாட்டாமாலா போலிசார் தெரிவித்தனர்.
கடும் துன்புறுத்தலுக்கு ஆளான அந்தக் குடியேறிகள் குவாட்டாமாலா குடிநுழைவு ஆணையத்துக்குச் சொந்தமான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.