மணிலா: தென்சீனக் கடலில் உருவாகியுள்ள 'கொம்பாசு' சூறாவளி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தீவிரமடைந்துள்ள 'கொம்பாசு' சூறாவளியால் பிலிப்பீன்சில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி 11 பேர் மாண்டுவிட்டனர்.
இதற்கிடையே, சூறாவளி எச்சரிக்கை காரணமாக சீனாவின் ஷென்செனில் உள்ள யான்டின் துறைமுகத்தில் அன்றாட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஹாங்காங்கிலும் உச்சபட்ச புயல் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு முன்னெச்சரிக்கையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்குள் ஹாங்காங்கைத் தாக்கவுள்ள 2வது சூறாவளி இது. சென்ற வாரம் வீசிய லயன்ராக் சூறாவளிக்கு ஒருவர் மாண்டார்.