பியோங்யோங்: கொரிய வட்டாரத்தில் நிலவும் பதற்றத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று வெளிப்
படையாக கூறியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்.
பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி ஒன்றில் தொடக்க உரை நிகழ்த்தியபோது அவர் இவ்வாறு கூறினார்.
அப்போது பேசிய அவர், "தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும் அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியா ஆயுதங்களை அதிகரிப்பதற்குக் காரணம்," எனக் கூறினார்.
ஆயுதங்களை அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே, போரைத் தொடங்குவதற்கு அல்ல எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
வடகொரியாவுடன் எந்தவிதமான விரோத நோக்கமும் இல்லை என்று பைடன் நிர்வாகம் பலமுறை கூறியுள்ளது.
ஆனால், அதை நம்புவதற்கு அவர்களின் நடவடிக்கைகளில் எந்த அடிப்படையும் இல்லை எனவும் கிம் கூறினார்.
அண்மைய வாரங்களில் வடகொரியா, நீண்ட தூர கப்பல் ஏவுகணை, ரயிலில் இருந்து ஏவும் ஏவுகணை, ஹைப்பர்சோனிக் என அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.