ஆய்வு: பொருளியல் மீட்சிக்கு மின்மயம் ஆகுதல் முக்கியம்

1 mins read
64a201c8-cb36-40c7-a17d-218062627634
-

கொரோனா கிரு­மிப் பர­வ­லால் ஆசி­யான் நாடுகளின் எல்­லை­களும் வர்த்­த­கங்களும் மூடப்­பட்டு, பொரு­ளி­யல் வளர்ச்சி மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டதால், பல்­லா­யி­ரக் கணக்­கான ஆசி­யான் மக்­கள் மின்­னி­யல் முறை­க­ளுக்கு மாறி நி­லை­மையைச் சமா­ளித்­துள்­ள­னர்.

மிக வேக­மாக அவர்­கள் மின்­னி­யல் மயத்­துக்கு மாறி­னா­லும் அந்த வேகம் போத­வில்லை. வரும் ஆண்­டு­களில் வரு­வா­யை­யும் சேமிப்­பை­யும் பெருக்க தாங்­கள் மேன்­மே­லும் மின்­ம­ய­மாக வேண்­டும் என்று பலர் நம்­பு­வ­தாக ஆய்வு ஒன்று கூறு­கிறது.

உல­கப் பொரு­ளி­யல் மாநா­டும் (டபுள்­யூ­ஈ­எஃப்) சிங்­கப்­பூ­ரின் சீ நிறு­வ­ன­மும் கூட்­டாக நடத்­திய ஆய்­வில் அது தெரிய வந்­தது. சீ நிறு­வ­னம், ஷாப்பி போன்ற மின்­வர்த்­த­கத் தளங்­களை நடத்­து­கிறது.

ஆறு ஆசி­யான் நாடு­களில் உள்ள கிட்­டத்­தட்ட 86,000 பேரி­டம் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் ஆய்வு செய்­யப்­பட்­டது.