கொரோனா கிருமிப் பரவலால் ஆசியான் நாடுகளின் எல்லைகளும் வர்த்தகங்களும் மூடப்பட்டு, பொருளியல் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டதால், பல்லாயிரக் கணக்கான ஆசியான் மக்கள் மின்னியல் முறைகளுக்கு மாறி நிலைமையைச் சமாளித்துள்ளனர்.
மிக வேகமாக அவர்கள் மின்னியல் மயத்துக்கு மாறினாலும் அந்த வேகம் போதவில்லை. வரும் ஆண்டுகளில் வருவாயையும் சேமிப்பையும் பெருக்க தாங்கள் மேன்மேலும் மின்மயமாக வேண்டும் என்று பலர் நம்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
உலகப் பொருளியல் மாநாடும் (டபுள்யூஈஎஃப்) சிங்கப்பூரின் சீ நிறுவனமும் கூட்டாக நடத்திய ஆய்வில் அது தெரிய வந்தது. சீ நிறுவனம், ஷாப்பி போன்ற மின்வர்த்தகத் தளங்களை நடத்துகிறது.
ஆறு ஆசியான் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட 86,000 பேரிடம் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆய்வு செய்யப்பட்டது.