கோத்தா திங்கி: கோத்தா திங்கியில் உள்ள ஜாலான் கூலாய்- கோத்தா திங்கி வட்டாரத்தில் உள்ள செமாங்கார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று தீச்சம்பவம் ஏற்பட்டது.
கூலாயிலும் இஸ்கந்தார் புத்திரி வட்டாரத்திலும் உள்ள 200 இடங்களில் தண்ணீர் விநியோகம் தடைபட்டதாகக் கூறப்பட்டது.
சினாய், ஸ்கூடாய், பூலாய், கெம்பாஸ், நுசாஜயா, கெலாங் பாத்தா போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டதாக ரான்ஹில் தண்ணீர் விநியோக நிறுவனம் கூறியது.
தீச் சம்பவத்தால் ஆலையின் செயல்பாடுகள் நின்றுபோனதாக அது தெரிவித்தது. தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் யாருக்கும் அதில் காயமில்லை என்றும் கூறப்பட்டது. தண்ணீர் விநியோகத்தைக் கட்டம் கட்டமாக தொடங்கப்போவதாகவும் அது தெரிவித்தது.

