கந்தஹார்: ஷியா பள்ளிவாசலில் வெடிப்பு; 33 பேர் உயிரிழப்பு

கந்தஹார்: ஷியா பள்ளிவாசலில் வெடிப்பு; 33 பேர் உயிரிழப்பு

1 mins read
8946f65b-20cc-46cf-8627-22bc586313ab
-

கந்­த­ஹார்: ஆப்­கா­னிஸ்­தா­னின் கந்­த­ஹார் நக­ரில் உள்ள ஷியா பள்­ளி­வா­ச­லில் ஏற்­பட்ட வெடிப்­பு­களில் குறைந்­தது 33 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

மேலும் 72 பேர் காய­ம­டைந்­த­­னர் என்று அந்­ந­க­ரத்­தின் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­களை மேற்­கோள் காட்டி ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

இது கடந்த ஒரு வாரத்­தில் ஆப்­கா­னிஸ்­தா­னில் ஷியா முஸ்­லிம்­க­ளைக் குறி­வைத்த இரண்­டா­வது தாக்­கு­தல் ஆகும்.

வெடிப்பு நிகழ்ந்த பிபி பாத்­திமா பள்­ளி­வா­சல், கந்­த­ஹா­ரில் ஷியா முஸ்­லிம்­க­ள் வழிபடும் ஆகப் பெரிய பள்­ளி­வா­ச­லா­கும்.

வெள்­ளிக்­கி­ழ­மைத் தொழு­கை­யின்­போது வெடிப்­பு­கள் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

மேலும் அது தற்­கொ­லைத் தாக்­கு­தல் என்று சம்­ப­வத்­தைப் பார்த்­த­வர்­கள் கூறி­னர். தாக்­கு­தலை மூன்று பேர் நடத்­தி­னர் என்­றும் ஒரு­வர் வாச­லில் வெடி­குண்டை இயக்­கி­னார் என்­றும் மேலும் இரண்டு பேர் பள்­ளி­வா­சல் கட்­ட­டத்­துக்­குள் குண்­டு­களை வெடிக்­கச் செய்­த­னர் என்­றும் கூறப்­பட்­டது.

சம்­பவ இடத்­தில் தலி­பான் படை­கள் விசா­ரணை மேற்­கொண்டு வரு­வ­தாக தலி­பான் ஆட்­சி­யா­ளர்­க­ளின் பேச்­சா­ளர் கூறி­னார்.