மலேசியா: மியன்மார் குறித்து சமரசம் இல்லை

மலேசியா: மியன்மார் குறித்து சமரசம் இல்லை

1 mins read
2b60ffc3-46ab-4629-839c-4bc885759ac3
-

கோலா­லம்­பூர்: மியன்­மா­ரின் ராணு வத் தலை­வர் அந்­நாட்­டில் அமை­தித் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தும் கடப்­பாட்டை நிறை­வேற்­ற­வில்லை என்­றால் அவர் விரை­வில் நடத்­தப்­ப­ட­வுள்ள ஆசி­யான் உச்­ச­ நிலைக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வ­தைத் தான் விரும்­ப­வில்லை என்று மலே­சியா கூறி­யுள்­ளது.

மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர் செரி சாய்­ஃபுதின் அப்­துல்லா நேற்று இதைத் தெரி­வித்­தார்.

மியன்­மா­ருக்­கான ஆசி­யா­னின் சிறப்­புத் தூதர் எரி­வான் யூசூஃப் அடுத்த வாரம் அந்­நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வார் என்­றும் அவர் கூறி­னார்.

மியன்­மார் ராணு­வத் தலை­வர் மின் ஆங் ஹிலாய்ங் ஆசி­யான் உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வது குறித்து ஆசி­யான் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் நேற்று பேச்சு நடத்­தி­னர்.

இவ்­வே­ளை­யில் மியன்­மார் ராணு­வம் முன்வைத்த சண்­டை­ நி­றுத்த ஒப்­பந்­தத்­தில் சேரும்­படி மூத்த ராணு­வத் தள­பதி மின் ஆங் ஹிலாய்ங் நேற்று அங்­குள்ள பல்­வேறு குழுக்­க­ளுக்கு அழைப்பு விடுத்தார்.