ஆக்லாந்து: ஒரே நாளில் நாடெங்கும் பலருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டு சாதனை படைக்கும் முயற்சியில் நியூசிலாந்து இறங்கியது.
நேற்று நடைபெற்ற இந்த மாபெரும் முயற்சிக்கு நியூசிலாந்தில் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்தது.
இதற்கு முன்பு ஒரே நாளில் 93,000 பேருக்குத் தடுப்பூசி போட்ட சாதனையை முறியடிப்பதே நியூசிலாந்தின் சுகாதார அமைச்சு இலக்காக இருந்தது. கிட்டத்தட்ட 350,000 பேருக்குத் தடுப்பூசி போட நேரமும் இடமும் நேற்று ஒதுக்கப்பட்டது. இது நியூசிலாந்து மக்கள்தொகையில் ஏறத்தாழ 8.3 விழுக்காடாகும்.
இதற்கிடையே, ஆக்லாந்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 பேர் நேற்று அந்நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏர் நியூசிலாந்து போயிங் 787 விமானத்தில் ஏற்றப்பட்டனர். பயணத்துக்காக அல்ல. மாறாக, வித்தியாசமான முறையில் அவர்களுக்கு விமானத்தில் தடுப்பூசி போடப்பட்டது.