மெக்கா பள்ளிவாசலில் சமூக இடைவெளி நீக்கப்பட்டது

மெக்கா பள்ளிவாசலில் சமூக இடைவெளி நீக்கப்பட்டது

1 mins read
448085c0-2c59-43c4-b00b-173fb58bc1ee
சமூக இடைவெளி கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெக்கா பள்ளிவாசலில் யாத்திரிகர்கள் அருகருகே நின்று தொழுகையில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மெக்கா: சவூதி அரே­பி­யா­வின் புனித மெக்காவில் உள்ள பெரிய பள்­ளி­வா­ச­லில் சமூக இடை­வெளி கட்­டுப்­பாடு நீக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, நேற்று அங்கு முழு எண்­ணிக்­கை­யில் யாத்திரிகர்கள் னு­ம­திக்­கப்­பட்டனர்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளைத் தளர்த்­து­வது, பக்­தர்­களை முழு அள­வில் அனு­ம­திப்­பது ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ர­பூர்வ அறிக்கை கூறு­கிறது.

ஆனால் யாத்திரிகர்கள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளாக இருப்­ப­தும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­ப­தும் கட்­டா­யம்.

அத்­து­டன், பள்­ளி­வா­ச­லின் நடு­வில் அமைந்­துள்ள 'காபா'விற்கு அருகே யாரும் செல்ல முடி­யாத வகை­யில் தடுப்பு போடப்­பட்­டு

உள்­ளது.