லங்காவி: பல மாதங்களுக்குப் பிறகு லங்காவியில் தொடக்கநிலை மாணவர்கள் நேற்று முதல் மீண்டும் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.
மலேசியாவில் கிருமித் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியதையடுத்து, நான்காம் நிலை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் படிப்படியாக திறக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மலேசியாவின் லங்காவியில் தொடக்கநிலை முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நேற்று மீண்டும் பள்ளிக்குத் திரும்பி
னர்.
அப்போது மாணவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்
படுத்தப்பட்டனர்.
ஒருசில உயர்நிலை பள்ளிகளிலும் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
கிட்டத்தட்ட 29 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் நேற்று பள்ளிக்குச் சென்றதாக நியூ ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ் கூறுகிறது.
ஐம்பது விழுக்காட்டுத் திறனுடன் பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள் வாராந்திர அடிப்படையில் மாறி மாறி பள்ளிக்குச் செல்வர்.
லங்காவியைத் தொடர்ந்து லபுவானில் இன்றும் கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரஜெயா, மலாக்கா ஆகிய பகுதிகளில் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

