கோலாலம்பூர்: கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வாழ்க்கையை சிரமமாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று கூறிய மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தங்களது வாழ்க்கையை தாங்களே சிரமமாக்கிக்கொள்கிறார்கள் என்றார்.
நேற்று முன்தினம் மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்
களின் வாழ்க்கை சிரமமாகும் என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த கூற்றில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளைக் குறிப்பிடுவதாகப் பிரதமர் இஸ்மாயில் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகள் மலேசியாவில் மட்டுமல்ல, மற்ற நாடுகளிலும் உள்ளதாக அவர் சொன்னார். முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே உம்ரா பயணத்திற்கு அனுமதிக்கப்படுவதை அப்போது அவர் சுட்டினார்.

