மலேசியா: மேலும் 79 தொற்று மரணம்

1 mins read
c049671d-aac2-4365-9ac0-467bf3910e6f
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நேற்­நி­றை­ய நி­ல­வ­ரப்­படி, மேலும் 79 பேர் கொவிட்-19 தொற்­றுக்­குப் பலி­யாகி­விட்­ட­னர். இதை­யும் சேர்த்து அங்கு இது­வரை 28,138 பேர் தொற்­றுப்­பா­திப்­பால் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர். தொற்று மரண எண்­ணிக்­கை­யில் பெர்­லிஸ் மாநிலம்தான் முன்­னி­லை­யில் உள்­ளது. அங்கு ஒரு மில்­லி­யன் பேருக்கு 75 தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இதற்­க­டுத்­த­ப­டி­யாக சர­வாக் 53 மர­ணங்­க­ளு­டன் இரண்­டா­வது இடத்­தி­லும், பினாங்கு 40 மர­ணங்­க­ளு­டன் மூன்­றாம் இடத்­தி­லும் உள்­ளன. கடந்த பதி­னான்கு நாட்­களில் சர­வாக்­ மாநிலத்தில் மட்­டும் 150 பேரும், ஜோகூர் பாரு­வில் 109 மரணங்களும் மூன்­றா­வ­தாக சிலாங்­கூர், கோலா­லம்­பூர், புத்­ரா­ஜெ­யா­வில் 91 மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. அவர்களில் 68.5 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போடா­த­வர்­கள் என்­றும் 21.5 விழுக்­காட்­டி­னர் ஒரு முறை தடுப்­பூசி போட்டுள்ளனர் என்­றும் 10 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுள்ளனர்.