தோக்கியோ: ஜப்பானில் ஆளும் முற்போக்கு ஜனநாயகக் கட்சி, அக்டோபர் 31ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று தேர்தல் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கியோடோ நியூஸ் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதேபோன்று மற்ற ஊடகங்களின் கருத்துக்கணிப்பிலும் முற்போக்கு ஜனநாயகக் கட்சியும் அதன் துணைக் கட்சியான கொமைட்டோ கட்சியும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.
இந்தத் தேர்தலில் ஆக அதிகமாக 465 இடங்களைக் கைப்பற்றி சக்திவாய்ந்த நாடாளுமன்றத்தை முற்போக்கு ஜனநாயகக் கட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
கருத்துக்கணிப்புக்கான வாக்கெடுப்பின்போது 54 விழுக்காட்டினர் கிஷிடாவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்துள்ளனர்,
பதினான்கு விழுக்காட்டினர் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் யுகியோ எடானோவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 58 விழுக்காட்டினர் சிடிபி கட்சிக்கு அரசாங்கத்தை நடத்தும் அளவுக்கு போதுமான திறன் இல்லை என்று கூறியதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.