பேங்காக்: சிங்கப்பூர் உள்ளிட்ட 46 நாடுகளில் இருந்து வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்
படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா.
ஏற்கெனவே தென்கொரியா, ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட பத்து நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 46 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறைந்து வரும் கிருமித்தொற்று சம்பவங்கள், அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிரிட்டன், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குத் தனிமைப்படுத்தலில் இருந்து தாய்லாந்து விலக்கு அளித்துள்ளது.
விமானப் பயணியாகவும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவராகவும், கிருமித்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருப்பவராகவும் இருக்கும் பட்சத்தில் தாய்லாந்து வரும் ஒருவர் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் கூறியுள்ளார்.
முன்னோடித் திட்டமாக சென்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி புக்கெட் தீவு மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டது.
தாய்லாந்தின் முக்கியச் சுற்றுலாத்தலங்களான பேங்காக், ஹூவா ஹின், பட்டாயா ஆகிய நகரங்களில் முடக்கநிலை உத்தரவு இம்மாத இறுதியில் நீக்கப்படும்.
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல் காரணமாக தாய்லாந்தில் கடந்த சில மாதங்களில் கிருமிப் பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தது.
ஆனால், 2019ல் ஈர்க்கப்பட்ட சுமார் 40 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற எண்ணிக்கையை, அது வெகுவாக பாதித்தது.
இதனால் கடந்த ஆண்டு தாய்லாந்து சுற்றுலாத் துறை $50 பில்லியன் வருவாய் இழப்பு கண்டது, அதாவது 82 விழுக்காடு சரிந்
தது.
இந்த ஆண்டு வெறும் 100,000 வெளிநாட்டுப் பயணிகளே வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு
வதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை கூறியது.