வெளிநாட்டு ஊழியர்களை அனு
மதிப்பதற்கான மனித வள அமைச்சின் செயல்பாட்டு நடைமுறை
களுக்கு மலேசிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கிய தடுப்பூசியை முழுமையாக போட்டவராக இருப்பதும் அதற்கான சான்றிதழும் அவசியம்.
அத்துடன் சுகாதார அமைச்சு பரிந்துரைக்கும் காலத்திற்கு, அரசாங்க மையங்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாகும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீடு, அனுமதிப்பதற்கான தேதிகள் ஆகியவை உள்துறை அமைச்சு, மனித வள அமைச்சின் கூட்டு முடிவுக்கு உட்பட்டவை என்றும் பிரதமர் இஸ்மாயில் சொன்னார்.