கோலாலம்பூர்: மலேசிய அரசியல்வாதிகள் பலருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருப்பதாலும் பலர் உடல்பருமனுடன் இருப்பதாலும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்படாமல் இருக்க முகக்
கவசத்தை அணிந்து கொள்ளும்படி அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நினைவூட்டியுள்ளார்.
பிரிட்டனில் சிலர் முகக்கவசம் அணிய மறுப்பதால் அங்கு புதிதாக கொவிட்-19 அலை ஏற்பட்டுள்ளதாக திரு கைரி கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கிருமித்தொற்று ஏற்பட்டால் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றார் அவர்.
கூட்டங்கள், கலந்துரையடல்களில் முகக்கவசம் அணியாத அரசியல்வாதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

