கோலாலம்பூர்: கோலாலம்பூர்-ஜோகூர் பாரு அதிவிரைவு ரயில் கட்டமைப்பில் சிங்கப்பூரும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவரான முகம்மது காலிட் நூர்டின் தெரிவித்துள்ளார்.
அந்த ரயில் பாதையில் சிங்கப்பூர் இடம்பெறாவிட்டால் ரயில் பாதையைக் கட்ட எடுத்த முயற்சிகளுக்குப்
பயனில்லாமல் போய்விடும் என்று ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான திரு காலிட் நூர்டின் கூறினார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டு ரயில் பாதையை ஜோகூர் பாருவில் முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

