மெல்பர்ன்: ஆஸ்திரேலியா, 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்தும் இலக்கைக் கொண்டுள்ளது. அதற்கு ஆதரவளிக்கப்போவதாக அந்நாட்டின் ஆளும் கூட்டணியில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய கட்சி கூறியுள்ளது.
இது, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் ஸ்காட் மோரிசன் கரியமில வாயு வெளியேற்றம் சம்பந்தப்பட்ட தனது இலக்கை விரிவுபடுத்த வகைசெய்யும்.