பங்ளாதேஷில் ஆர்ப்பாட்டங்கள்

பங்ளாதேஷில் ஆர்ப்பாட்டங்கள்

1 mins read
f55e4ee9-e41d-4a6d-8d88-1b776d0e2373
-

டாக்கா: பங்­­ளா­தே­ஷில் இந்து ஆல­யங்­கள், இந்து மக்­க­ளின் இல்­லங்­கள் ஆகி­ய­வற்­றின் மீது நிகழ்த்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளைக் கண்­டித்து அந்­நாட்­டின் சிறு­பான்மை சமயங்­க­ளைச் சேர்ந்த பல்­லாயி­ரக்­க­ணக்­கா­னோர் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர். 60க்கும் அதி­க­மான இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

இந்­துக்­க­ளுக்கு எதிராக சென்ற வாரம் நிகழ்ந்த கல­வரங்­களில் ஏழு பேர் உயி­ரி­ழந்­த­னர். அதைத் தொடர்ந்து நேற்று முன்­தி­னம் ஆர்ப்­பாட்டங்­கள் இடம்­பெற்­றன. பங்­­ளா­தே­ஷின் இரண்­டா­வது ஆகப் பெரிய நக­ரான சிட்­டா­காங்­கில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­களில் குறைந்­தது 15,000 பேர் கலந்­து­கொண்­ட­னர். அந்­ந­க­ரில்­தான் பெரிய அள­வில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. தாக்­கு­தல்­க­ளின் தொடர்­பில் கடு­மை­யான நட­வடிக்கை எடுக்­கப்­போ­வ­தாக பங்­ளா­தே­ஷின் இந்து சமூ­கத் தலை­வர்­க­ளி­டம் அந்­நாட்­டுப் பிர­த­மர் ஷெய்க் ஹசீனா வாக்­கு­றுதி அளித்­தார்.